கிழக்கு மாகாண புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக ராஜித சிறி தமிந்த பதவியேற்பு!!


கிழக்கு மாகாண புதிய சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபராக நியமனம் பெற்றுள்ளள ராஜித சிறி தமிந்த தமது கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று (02) திகதி காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பணிமனையில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் கந்தளாய் பிராந்தியங்களுக்குப் பொறுப்பான சீரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் உட்பட மாகாண மற்றும் மாவட்ட உயர்பொலிஸ் அதிகாரிகள் அடங்லாக சர்வமத தலைவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையையும் புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஏற்றுக்கொண்டார். புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் இதற்கு முன்னர் தென்மாகாணத்தில் கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.