வி.சுகிர்தகுமார்
ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்த மக்கள் வங்கியின் தன்னியக்க பணமீளப்பெறல் இயந்திரம் இன்று திறந்து வைக்கப்பட்டதுடன் அக்கரைப்பற்று மக்கள் வங்கி கிளையின் தன்னியக்க பணவைப்பு இயந்திரத்தின் செயற்பாடுகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அக்கரைப்பற்று மக்கள் வங்கிகிளையின் முகாமையாளர் எம்.பி.எம். அன்வர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மக்கள் வங்கியின் பிரதி பொது முகாமையாளர் பி.எம்.பிரேமானந்த் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
நிகழ்வுகளில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் மற்றும் அக்கரைப்பற்று மாநகரசபை மேயர் அதாவுல்லா அகமட் சகி ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன் மக்கள் வங்கியின் பிராந்திய முகாமையாளர் எச்.டி.குணரெட்ண மற்றும் பிராந்திய உதவி முகாமையாளர் டபிள்யு.எம்.டி.வீரசிங்க, எஸ்.பி.சூரியகுமாரன் வைத்தியர் த.தர்ஷிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அக்கரைப்பற்று மக்கள் வங்கியின் தன்னியக்க பணவைப்பு நிலையத்தை அதிதிகள் திறந்து வைத்ததுடன் இயந்திரத்தின் செயற்பாடுகளை ஆரம்பித்து வைத்தனர்.
பின்னர் கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மருத்துவதுறையில் 13 தங்கப்பதக்கங்களை பெற்று தேசிய ரீதியில் சாதனை படைத்த வைத்தியர் த.தர்ஷிகாவிற்கு 75 ஆயிரம் ரூபா காசோலை விசேட பரிசாக வழங்கி வைக்கப்பட்டது.
பின்னர் ஆலையடிவேம்பு மக்கள் வங்கி கிளையில் நிர்மாணிக்கப்பட்ட தன்னியக்க பணமீளப்பெறல் இயந்திரத்தை அதிதிகள் திறந்து வைத்து பணமீளப்பெறல் செயற்பாட்டையும் ஆரம்பித்து வைத்தனர்.
தொடர்ந்து வங்கியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளுக்கு அக்கரைப்பற்று மக்கள் வங்கிகிளை முகாமையாளர் எம்.பி.எம். அன்வர் நன்றி தெரிவித்தார்.
நிகழ்வுகளில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் மற்றும் அக்கரைப்பற்று மாநகரசபை மேயர் அதாவுல்லா அகமட் சகி ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன் மக்கள் வங்கியின் பிராந்திய முகாமையாளர் எச்.டி.குணரெட்ண மற்றும் பிராந்திய உதவி முகாமையாளர் டபிள்யு.எம்.டி.வீரசிங்க, எஸ்.பி.சூரியகுமாரன் வைத்தியர் த.தர்ஷிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அக்கரைப்பற்று மக்கள் வங்கியின் தன்னியக்க பணவைப்பு நிலையத்தை அதிதிகள் திறந்து வைத்ததுடன் இயந்திரத்தின் செயற்பாடுகளை ஆரம்பித்து வைத்தனர்.
பின்னர் கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மருத்துவதுறையில் 13 தங்கப்பதக்கங்களை பெற்று தேசிய ரீதியில் சாதனை படைத்த வைத்தியர் த.தர்ஷிகாவிற்கு 75 ஆயிரம் ரூபா காசோலை விசேட பரிசாக வழங்கி வைக்கப்பட்டது.
பின்னர் ஆலையடிவேம்பு மக்கள் வங்கி கிளையில் நிர்மாணிக்கப்பட்ட தன்னியக்க பணமீளப்பெறல் இயந்திரத்தை அதிதிகள் திறந்து வைத்து பணமீளப்பெறல் செயற்பாட்டையும் ஆரம்பித்து வைத்தனர்.
தொடர்ந்து வங்கியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளுக்கு அக்கரைப்பற்று மக்கள் வங்கிகிளை முகாமையாளர் எம்.பி.எம். அன்வர் நன்றி தெரிவித்தார்.