புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள எரிபொருள் கம்பனிக்கு அமைச்சரவை அனுமதி...!!


இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சுத்திகரிப்பு உற்பத்திகளை பயன்படுத்தி திரவ பெற்றோலிய வாயு கருத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு இலகுவான வகையில் குறித்த கூட்டுத்தாபனத்துடன் கூட்டிணைந்த கம்பனி ஒன்றை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த யோசனை எரிசக்தி அமைச்சரினால், நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனமானது, மூன்றாவது போட்டியாளராக எரிவாயு சந்தைக்கு பிரவேசிப்பதன் முக்கியத்துவம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.