வறிய குடும்பங்களுக்கு உதவி-மகளிர் ஒன்றியம் நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்புகளின் ஒன்றியத்தினால் வறிய நிலையில் உள்ள பெண்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்புகளின் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம் கல்லடி,உப்போடையில் அதன் தலைமையகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்புகளின் ஒன்றியத்தின் பணிப்பாளரும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான திருமதி செல்வி மனோகர் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்புகளின் ஒன்றியத்தின் செயற்பாடுகள் மற்றும் புதிய அங்கத்தவர்களை இணைக்கும் செயற்பாடுகள் முன்னெடுப்பட்டன.

இந்த கூட்டத்தின் போது ஒன்றியத்தின் பணிப்பாளரும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான திருமதி செல்வி மனோகரின் மாநகரசபை சம்பளப்பணத்தில் இருந்து 15 வறிய நிலையில் உள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இதன்போது எதிர்வரும் காலத்தில் மகளிர் ஒன்றியத்தின் ஊடாக எதிர்வரும் காலத்தில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்ட.
இந்த நிகழ்வில் மட்;டக்களப்பு மாவட்டத்தின் 12பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து பெருமளவான மகளிர் கலந்துகொண்டனர்.