தந்தையை இழந்த மாணவிக்கு துவிச்சக்கர வண்டி உதவி.


எமக்காக நாம் உதவிடுவோம்  அமைப்பால் தேவைப்பாடு தந்தையை இழந்த   மாணவிக்கு துவிச்சக்கரவண்டி வழங்கல்.

எமக்காக நாம் உதவிடுவோம் வாரிர் அமைப்பின் உதவும்  திட்டத்திற்கமைய இன்று (19.02) மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட   கொக்குவில் கிராமத்தில்   தேவைப்பாடு உடைய தந்தையை இழந்த மாணவியின் கற்றலுக்காக இந்த மனிதாபிமான உதவி   வழங்கப்பட்டது.

எமக்காக நாம் உதவிடுவோம் மனிதாபிமான உதவிகள் வழங்கும் சமுக அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க  குடத்தனை அகரம் உதவுங்கரங்கள் நலன்புரிச்சங்கத்தின் இவ் மாணவிக்கான துவிச்சக்கர வண்டியை அன்பளிப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது .

இன்நிகழ்வில் கொக்குவில்வட்டார மாநகரசபை உறுப்பினர் ரகுநாதன் எமக்காக நாம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தீபாகரன் உட்பட அதன் உறுப்பினர்களும்  கலந்து கொண்டனர்.