(சசி துறையூர் )
உள்ளூராட்சி ஆளுகை நிறுவனத்தால் மட்டக்களப்பில் இளம் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கான தலைமைத்துவ செயலமர்வு.
நேற்று சனிக்கிழமை (25.01) மட்டக்களப்பு ஈஸ்ற்லெகுன் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற இந்த செயலமர்வில் பல்வேறு அரசியல் கட்சிகளின் உள்ளூராட்சி சபைகளில் அங்கத்துவம் பெறும் இளம் உறுப்பினர்கள் அக் கட்சிகளினது இளைஞரணி செயற்பாட்டாளர்கள் என ஜம்பதுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மிகச்சிறந்த வளவாளர்களால் இலங்கையராக ஒருவர் தன்னை அடையாளப்படுத்தவும், உணரவும் , உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை துரிதப்படுத்தவும், வினைத்திறனாகவும், புதிய எண்ணங்கள் சிந்தனைகளோடு காலத்திற்க்கு ஏற்ப மக்களின் தேவையறிந்து மக்களுக்காக செயலாற்றவும் வழிகாட்டல் ஆலோசனைகள் வழகப்பட்டமை குறிப்பிடத்தக்கது .
இவ் வேலைத்திட்டத்தில் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் நிருவாகிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.