எமக்காக நாம் உதவிடுவோம் வாரீர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லோ.தீபாகரன் அவர்களினால் ஏறாவூர் சவுக்கடி கிராமத்தில் வசிக்கும் வறிய குடும்பங்களுக்கு சவுக்கடி பொது மக்களின் கோரிக்கைக்கு அமைய உதவி.
மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட சவுக்கடி எல்லைக்கிராமத்தில் தேவைப்பாடு உடைய ஒருவயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட குடும்பங்களுக்கு அத்தியாவசியமான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.