துறைநீலாவணையில் மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் வாக்களித் தகுதி.



இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும்  வாக்கெடுப்பு நாளை சனிக்கிழமை 16.11.2019 நடைபெறவுள்ளது,.

 இந்த தேர்தலில் பட்டிருப்பு தொகுதி மண்முனை தென் எருவில் பற்று  பிரதேசம் துறைநீலாவணை கிராமத்தில் மொத்தமாக மூவாயிரத்து நானுற்றி என்பத்தி மூன்று (3483)  பேர் இம்முறை   வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.


நான்கு கிராம சேவகர் பிரிவுகளை கொண்ட துறைநீலாவணை கிராமத்தில் உள்ள நான்கு பாடசாலைகளும்  வாக்குப்பதிவு நிலையங்களாக தயார்படுத்ததப்பட்டுள்ளன.

மட்/சித்தி விநாயகர் பாடசாலை வாக்குப்பதிவு நிலையத்தில்  1026 வாக்காளர்களும்,
மட்/மகாவித்தியாலயம் பாடசாலை வாக்குப்பதிவு நிலையத்தில் 657 வாக்காளர்களும் , மட்/மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலை  வாக்குப்பதிவு நிலையத்தில் 702 வாக்காளர்களும் , மட்/விபுலானந்தா பாடசாலை வாக்குப்பதிவு நிலையத்தில் 1098 வாக்காளர்களும் தமது வாக்குகளை செலுத்தவுள்ளனர். (மொத்தமாக 3483 )

காலை 07.00மணி முதல் பிற்பகல் 05.00மணிவரை
நான்கு வாக்குப்பதிவு நிலையங்களிலும் சுமூகமான வாக்குப்பதிவுகளுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.