திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் சூர சம்ஹாரம் நாளை

மட்டக்களப்பு,கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் நாளை சனிக்கிழமை பிற்பகல் சூரம் சம்ஹார நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது.

திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் கந்தசஸ்டி விரதம் சிறப்பான முறையில் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.
தமிழர்களின் மரபு வழியாக பூசைகள் நடாத்தப்பட்டுவரும் இந்த ஆலயத்தில் தினமும் விசேட பூஜைகள் நடைபெற்று கந்தபுராண படலமும் பாடப்பட்டுவருகின்றது.
நாளை சனிக்கிழமை மாலை 3.00மணிக்கு ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று சூரசம்ஹார நிகழ்வு சிறப்பாக நடைபெறவுள்ளது.