புன்னைக்குளம் சமூர்த்தி வங்கி வீதிக்கு காபட் இடும் ஆரம்ப நிகழ்வு


(எஸ்.நவா)


போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவுகுற்பட்ட
புன்னக்குளம் சமுர்த்தி வங்கி வீதிக்கு ரன் மாவத் நிகழ்ச்சி 
திட்டத்தின்கீழ் காபட் இடும் ஆரம்ப நிகழ்வு (14) வெள்ளிக்கிழமை  பிரதேரச செயலாளர் ஆர் ராகுலநாயகி தலைமையில் சமுர்த்தி வங்கி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
நாடு பூராகவும் அமுல் படுத்தப்பட்டு வரும் ரன் மாவத் நிகழ்சி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட திட்டங்களில் ஒன்றான  புன்னக்குளம் சமுர்த்தி வங்கி வீதிக்கு 35 மில்லியன் செலவில் இவ்வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி அவர்களின் வேண்டுதலுக்கமைவாக இவ்வீதிக்கு முன்னாள் பிரதியமைச்சரும் ஜக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்புத்தொகுதி பிரதம அமைப்பாளரும்; தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் தலைவருமான சோ.கணேசமூர்த்தி அவர்களினால் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வின்போது மகாண பணிப்பாளர் திரு.தருமரெத்தினம் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் பதியராசா வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் திரு.சசிநந்தன் மத்திய நீர்பாசன பொறியியலாளர் திரு.பத்மதாசன் வெல்லாவெளி சமுர்த்தி வங்கி முகாமையாளர் திருமதி.த.யோகச்சந்திரன் கிராம சேவை உத்தியோகத்தர்  அபிவிருத்தி உத்தியோகத்தர் கிராம தலைவர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.