மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஏமாற்றம் கொடுத்த ஜனாதிபதி

மட்டக்களப்புக்கு இன்று காலை ஜனாதிபதி வருகைதருவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது விஜயம் இறுதி நேரத்தில் ரத்துச்செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கிராம சக்தி கிழக்கு மாகாண வேலைத்திட்டம் தொடர்பிலான கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவிருந்தது.

எனினும் இன்று காலை 10.30 வருகைதரவிருந்த நிலையில் அனைத்து அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் டேபா மண்டபத்திற்கு வருகைதந்த போதிலும் இறுதியில் ஜனாதிபதியின் வருகை ரத்துச்செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.