மட்டக்களப்பு செங்கலடி பிரதேசசெயலாளர் பிரிவுக்குப்பட்ட வந்தாறுமூலை பாளமடு தெற்கு கிராம சேவகர் பிரிவுக்குப்பட்ட பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாவடிவேம்பு -2 பகுதியைச் சேர்ந்தவிஸ்வலிங்கம் ஏரம்பமூர்த்தி (வயது 65) மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்துள்ளவர் ஆவார்.
உயிரிழந்தவர் தனது கால்நடை பண்ணைக்கு சென்று கொண்டிருந்த வேளை இன்று காலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
யானை தாக்குதல் தொடர்பில் கடந்த காலத்தில் பல்வேறு தடவைகளில் குரல் எழுப்பப்பட்டுவரும் நிலையிலும்இதுவரையில் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.
மாவடிவேம்பு -2 பகுதியைச் சேர்ந்தவிஸ்வலிங்கம் ஏரம்பமூர்த்தி (வயது 65) மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்துள்ளவர் ஆவார்.
உயிரிழந்தவர் தனது கால்நடை பண்ணைக்கு சென்று கொண்டிருந்த வேளை இன்று காலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
யானை தாக்குதல் தொடர்பில் கடந்த காலத்தில் பல்வேறு தடவைகளில் குரல் எழுப்பப்பட்டுவரும் நிலையிலும்இதுவரையில் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.