அரையிறுதிக்கு தகுதி பெற்றது மட்டக்களப்பு பெண்கள் அணி.





தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடாத்தும் 30வது தேசிய இளைஞர் விளையாட்டுப்போட்டிகள் வரிசையில்   ஆண் பெண் இருபாலாருக்குமான
கபடிப்போட்டிகள்  நேற்று (09)  மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உள்ளகரங்கில் ஆரம்பிக்கப்பட்டன.

இச் சுற்றுத்தொடரில்   மட்டக்களப்பு மகளிர் கபடி அணி அரையிறுதி போட்டிக்கு ஹம்பாந்தோட்டை மகளிர் அணியை 46கு 20 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி முன்னேறியுள்ளது.

 அந்த வகையில்  குருணாகல் அணியுடனான அரையிறுதி போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை பி.ப 05.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

முன்னதாக பொலநறுவை மகளீர் அணியுடனான போட்டியில் அந்த அணியை 53கு 07 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியிருந்தது மட்டக்களப்பு அணி.

மட்டக்களப்பு மகளிர் அணி கடந்தவருடம் நடைபெற்ற தேசிய இளைஞர் கபடி போட்டியில்   இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டமையும்   குறிப்பிடத்தக்கது.