(லியோன்)
இலங்கையின் 70 வது தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு நாடளாவிய
ரீதியில் பல்வேறு விசேட நிகழ்வுகள் இன்று நடைபெற்றன .
மட்டக்களப்பு
மாவட்டத்தில் தேசிய சுதந்திர தின
நிகழ்வுகள் மாவட்டத்தின் சகல அரச திணைக்களங்களிலும் மற்றும் அரச அலுவலங்களில் தேசிய
கொடியேற்றப்பட்டு விசேட நிகழ்வுகள் இன்று நடைபெற்றது .
மட்டக்களப்பு
மாவட்டத்திற்கான 70ஆவது சுதந்திரத்தின
நிகழ்வுகள் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் தலைமையில் மட்டகளப்பு வெபர்
மைதானத்தில் நடைபெற்றது .
ஆரம்ப
நிகழ்வாக மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இருந்து அதிதிகளை பொலிசார், இராணுவம்
மற்றும் பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் , கலாசார
நிகழ்வுகளுடன் மட்டக்களப்பு வெபர்
மைதானத்திற்கு அழைத்துவரப்பட்டனர் .
இதனை
தொடர்ந்து வெபர் மைதானத்தில் நடைபெற்ற
70 ஆவது சுதந்திரத்தின
நிகழ்வில் அரசாங்க அதிபர் தேசிய
கொடியை ஏற்றி
சுதந்திர தின நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார் .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யடவர .மாவட்ட மேலதிக அரசாங்க திருமதி சுதர்ஷனி
ஸ்ரீகாந்த , மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் எ .நவேஸ்வரன் , மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
எம் .எம் .ஜி .டி. தீஹா வதுற மற்றும் மதத்தலைவர்கள் ,பிரதேச செயலாளர்கள் ,பாதுகாப்பு
படை தலைமை அதிகாரிகள் ,
பொலிஸ் உத்தியோகத்தர்கள் ,அரச திணைக்கள அதிகாரிகள் ,
பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,அரச அலுவலக அதிகாரிகள் ,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர் .