களுவாஞ்சிகுடி,படுவான்கரையில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிப்பு

காணாமல்போனவர்களின் உறவினர்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் வடகிழக்கு மாகாணத்தின் தமிழ் பிரதேசங்களில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.


மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் வழமையான நடவடிக்கைகள் நடைபெற்றுவரும் நிலையில் தமிழ் பகுதிகளில் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு நகர் தொடக்கம் அனைத்து தமிழ்; பகுதிகளிலும் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ளதுடன் அரச தனியார் வங்கிகளும் பூட்டப்பட்டுள்ளன.

அரச நிறுவனங்கள் திருந்திருக்கின்றபோதிலும் ஒரு பொதுமக்கள் செல்லாத காரணத்தினால் வெறிச்சோடிக்கிடப்பமை காணமுடிகின்றது.

இதேபோன்று படுவான்கரை பகுதிகளான வெல்லாவெளி,கொக்கட்டிச்சோலை,பட்டிப்பளை,வவுணதீவு ஆகிய பகுதிகளிலும் ஹர்த்தால் வெற்றிகரமாக நடைபெற்றுவருகின்றது.