(லியோன்)
கத்தோலிக்க திருச்சபையின் தேவ அழைத்தல் தினத்தை
சிறப்பிக்கும் வகையில் அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் விசேட திருப்பலிகளும் ,
நிகழ்வுகளும் இன்று இடம்பெற்றது .
2016ஆம் ஆண்டுக்கான திருச்சபையின் தேவ அழைத்தல் சிறப்பிக்கும்
முகமாக மட்டக்களப்பு மறை மாவட்டத்தின்
அனைத்து திருச்சபைகளின் ஏற்பாட்டில் மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் தலைமையில் விசேட
திருப்பலி மரியாள் பேராலயத்தில் இடம்பெற்றது .
இந்த திருப்பலியில் மட்டக்களப்பு மறை மாவட்ட அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள் ,
துறவியர்கள் , பாடசாலை மாணவர்கள் ,பொதுநிலையினர் என பலர் கலந்துகொண்டனர் .