(லியோன்)
மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு கிராமத்தை சேர்ந்த திருதி . தட்தோனந்தம் தங்கேஸ்வரி என்பவரின் மகன் நேற்று காலை முதல் காணாமல் போயுள்ளதாக அவரின் தாயார் தெரிவிக்கின்றார்.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட இருதயபுரம் மேற்கு கிராமத்தின் இலக்கம் 29,
நான்காம் குறுக்கை சேர்ந்த தட்தோனந்தம்
கிரிசாந்த் ( சாந்தன் ) 19 வயதுடைய
தனது மகன் நேற்று காலை முதல் வீட்டில்
இருந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளதாக அவரின் தாயார் தெரிவிக்கின்றார் .
காணாமல் போன தனது மகன் சிறிது
மனநோயால் பாதிப்புக்குள்ளானவர் என தாயார் தெரிவிக்கின்றார் .
குறித்த இளைஞன் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் 077 95 89 551
என்ற தொலை பேசி இலக்கத்திற்கும் அல்லது 065
222 44 23 என்ற
மட்டக்களப்பு பொலிஸ் நிலைய இலக்கத்திற்கும் அறிவிக்குமாறு தெரிவிக்கின்றனர் .