இருதயபுரம் நான்காம் குறுக்கை சேர்ந்த 19 வயதுடைய இளைஞனை காணவில்லை

 (லியோன்)

மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு கிராமத்தை சேர்ந்த திருதி . தட்தோனந்தம் தங்கேஸ்வரி என்பவரின் மகன் நேற்று காலை முதல் காணாமல் போயுள்ளதாக
அவரின் தாயார் தெரிவிக்கின்றார்.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட இருதயபுரம் மேற்கு கிராமத்தின் இலக்கம் 29, நான்காம் குறுக்கை சேர்ந்த  தட்தோனந்தம் கிரிசாந்த் ( சாந்தன் )  19 வயதுடைய தனது  மகன் நேற்று காலை முதல் வீட்டில் இருந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக   அவரின் தாயார் தெரிவிக்கின்றார் .

காணாமல் போன தனது மகன்  சிறிது மனநோயால் பாதிப்புக்குள்ளானவர் என தாயார் தெரிவிக்கின்றார்  .

குறித்த இளைஞன்   தொடர்பாக தகவல் அறிந்தவர்கள்  077 95 89 551  என்ற  தொலை பேசி இலக்கத்திற்கும் அல்லது 065 222 44 23  என்ற மட்டக்களப்பு பொலிஸ் நிலைய இலக்கத்திற்கும்  அறிவிக்குமாறு தெரிவிக்கின்றனர் .