மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு பேண்ட் வாத்திய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு பேண்ட் வாத்திய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது .


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு  பாடசாலை நலன் விரும்பிகளால் சுமார் 1 50 ,000.00  பெறுமதியான பேண்ட் வாத்திய உபகரணங்களை பாடசாலைக்கு வழங்கும் நிகழ்வு அதிபர் கே .சிறிதரன் தலைமையில் பாடசாலையில் இன்று இடம்பெற்றது .


இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் , ஏறாவூர் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம் .பாலசுப்பிரமணியம் , மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , பாடசாலை நலன் விரும்பிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர் .