மட்டக்களப்பு இந்து மகளிர் மன்றத்தின் பரிசளிப்பு விழா

(ரவிக்குமார்)

மட்டக்களப்பு இந்து மகளிர் மன்றத்தின் பரிசளிப்பு விழா அண்மையில் ஆனைப்பந்தியில் உள்ள அதன் மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு இந்து மகளிர் மன்றத்தின் தலைவி திருமதி ரி.மனோஹரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் யு.உதயசிறிதர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிசன் தலைவர் சுவாமி பிரபுபிபானந்தா ஜி மகராஜ் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் பொன்.வன்னியசிங்கம்,கல்குடா வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுஜாதா புலேந்திரகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது இந்த சமயப்போட்டிப்பரீட்சைகளின்போது முதல்; மூன்று இடங்களைப்பெற்ற மாணவர்கள் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.