(லியோன்)
மட்டக்களப்பு மண்முனை வடக்கு
பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான
மாதிரி வீட்டுத்தோட்டம்
அமைத்தல்
தொடர்பான
ஒரு நாள் கருத்தரங்கு இன்று
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.
தவராசா தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது .
மட்டக்களப்பு மாவட்ட விவசாய
திணைக்களம்
மட்டக்களப்பு மத்திய வலயத்தின் கீழ் இயங்கும் கல்லடி
விவசாயப் போதனாசிரியர் பிரிவில் நகர் புற
மாதிரி வீட்டுத்தோட்ட பயிர்செய்கைகான ஊக்குவிக்கும் திட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது .
இதேபோன்று மண்முனை வடக்கு பிரதேச
செயலகத்தின் ஊடாக முன்பள்ளி
அபிவிருத்தி செயல்திட்டத்தின் ஒழுங்கமைப்பில்
மண்முனை வடக்கு பிரதேச
செயலக பிரிவுக்குட்பட்ட
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான
மாதிரி வீட்டுத்தோட்டம்
அமைத்தல்
தொடர்பான
கருத்தரங்கு
இன்று இடம்பெற்றது .
இடம்பெற்ற கருத்தரங்கு நிகழ்வில்
வளவாளராக கல்லடி விவசாய
போதனாசிரியர் திருமதி தெய்வமனோஹாரி கலந்துகொண்டார் .
இந்த நிகழ்வின் போது முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் வழங்கப்பட்டும்
கொடுப்பனவுகளும்
மற்றும்
மாதிரி வீட்டுதோட்டதிற்கான
மரக்கன்றுகளும் , விதைநாற்றுகளும் வழங்கப்பட்டது .
இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச
செயலக முன்பள்ளி
பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் . டி . மேகராஜ்
, முன்பள்ளி அபிவிருத்தி உதவி
கல்வி பணிப்பாளர் எம் . புவிராஜ் மற்றும் மண்முனை
வடக்கு பிரதேச செயலக
பிரிவுக்குட்பட்ட
முன்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர்
கலந்துகொண்டனர் .