திராய்மடு நாவலடி நாமகள் வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி

(லியோன்)

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட திராய்மடு நாவலடி நாமகள்  வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி நேற்று வியாழக்கிழமை மாலை பாடசாலையின் அதிபர்  வி .குணசீலன் தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ .யோகேஸ்வரன் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக மண்முனை வடக்கு கோட்ட கல்வி அதிகாரி எ.சுகுமாரன் ,உதவிக்கல்வி பணிப்பாளர் ,உடற்கல்வி  வி .லவக்குமார் திராய்மடு  வைத்தியசாலை வைத்திய அதிகாரி திருமதி .டி .மோகனசுந்தரம்   ஆகியோர் கலந்துகொண்டனர் .

ஆரம்ப நிகழ்வாக அதிதிகளை பாடசாலை மாணவர்களால் மாலை அணிவித்து  அழைத்து வரப்பட்டனர். இதனை தொடர்ந்து  தேசிய கொடி, பாடசாலை கொடி மற்றும் இல்ல கொடிகள் ஏற்றி தேசிய கீதம்  இசைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒலிம்பிக் சுடர் ஏற்றி மாணவர்களின் சத்தியபிரமாண நிகழ்வுடன் விளையாட்டுகள் ஆரம்பமானது.

இப் பாடசாலையின் இல்லங்களான கலைமகள் .மலைமகள் ,திருமகள்  ஆகிய இல்ல மாணவர்களின் விளையாட்டுகள் மிக சிறப்பாக இடம்பெற்றன. மாணவர்களின் விளையாட்டுகளை தொடர்ந்து ஆசிரியர்கள்,பெற்றோர்கள் பழைய மாணவர்களின் விளையாட்டுகளும், வினோத உடை போட்டிகளும் இடம்பெற்றன.

இப் பாடசாலையின் இவ் வருட இல்ல விளையாட்டு போட்டியில்  191 புள்ளிகளை பெற்று திருமகள்  இல்லம் 3ஆம் இடத்தையும்,   193 புள்ளிகளை பெற்று மலைமகள் இல்லம் 2ஆம் இடத்தையும், 221 புள்ளிகளை பெற்று கலைமகள் முதலாம் ஆம் இடத்தையும் பெற்றுக்கொண்டதுடன் வெற்றி கிண்ணங்களும் வழங்கப்பட்டது . 2015 ஆம் ஆண்டுக்கான  பாடசாலை இல்ல விளையாட்டு போட்டியில்  கலைமகள் இல்லம் அதிக புள்ளிகளை பெற்று பாடசாலையில் இல்ல சம்பியனானது .