தேசிய உற்பத்தித்திறன் தரவலைய போட்டித் தொடர் தொடர்பான தெளிவூட்டல் பயிற்சிக் கருத்தரங்கு

தேசிய உற்பத்தித்திறன் தரவலைய போட்டித் தொடர் 2013ஃ2014 தொடர்பான தெளிவூட்டல் பயிற்சிக் கருத்தரங்கு இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


இன்றைய தினம்  செவ்வாய்க்கிழமை காலை முதல் நடைபெற்ற இப் பயிற்சிக் கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் மாவட்ட இணைப்பாளர் ஆர்.புவனேந்திரன் மற்றும் செயலகத்தின் உத்தியோகத்தர்களும் பங்கு பற்றினர்.

இப் பயிற்சிக் கருத்தரங்கானது, கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலைகள், அரச திணைக்களங்களின் உற்பத்தித்திறன் தொடர்பான உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பயிற்சிக் கருத்தரங்கில் வளவாளராக த.சிவலோகநாதன் கலந்து கொண்டு தெளிவுபடுத்தல்களை வழங்கினார்.

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் வருடாவருடம் நடத்தப்படும் இந்த போட்டித் தொடரானது சிறந்த உற்பத்தித்திறன் மிக்க திணைக்களம், பாடசாலைகளைத் தெரிவு செய்து கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப் போட்டியில், பாடசாலைகளின் தரங்களை நிர்ணயிக்கும் வகையிலான பாடசாலைப்பிரிவுகள் இரண்டு, அரச அமைச்சுக்கள், மாகாண சபை அமைச்சுக்கள், அரச திணைக்களங்கள், மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்கள் பங்கு கொள்ளும் வகையிலான அரச பிரிவு, தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அரை அரச நிறுவனங்கள் பங்கு கொள்ளும் வகையிலான உற்பத்தித்திறன் சேவைப்பிரிவு ஆகிய நான்கு பிரிவுகளில் நடத்தப்படுகின்றன.