இலத்திரனியல் அடையாள அட்டை வழங்குவதற்கான நடவடிக்கை


(வி.சுகிர்தகுமார்)

இலத்திரனியல் அடையாள அட்டைகள் வழங்கும்போது ஆட்களின் விரல்களின் அடையாளங்களை பெற்றுக்கொள்ளல் தொடர்பாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக கிராமஉத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் பயிற்சிப்பட்டறை பிரதேச செயலகத்தில் நேற்றுமுன்தினம் (02) ஆரம்பமானது.


அரசபாதுகாப்பு மற்றும் நகரஅபிவிருத்தி அமைச்சின் ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சி பட்டறையானது பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வளவாளர்களாக கலந்து கொண்ட ஆட்பதிவு திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் வை.லவன்ராஜ், த.செல்வப்பிரியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.