சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் முதன்முறையாக மட்டக்களப்பு விஜயம்

புதிதாக உருவாக்கப்பட்ட சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி முதன்முறையாக இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்தார்.
இதன்போது இவருக்கு மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் பொலிசாரினால் வரவேற்பளிக்கப்பட்டது. மட்டக்களப்புக்கு வருகை தந்த இவரை, கிழக்கு மாகாண சிரேஸ்;ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர,மட்டக்களப்பு பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் இந்திரன் ஆகியோர் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து பொலிசாரின் அணி வகுப்பு மரியாதை இடம்பெற்றது. இதனையடுத்து  பிரதி பொலிஸ் மா அதிபர், சிரேஸ்;ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் செயலாளருக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.

இதன் பின்னர் மட்டக்களப்பு மாநகர சபையின் நகர மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திலும் அவர் பங்குபற்றினார்.