மட்டக்களப்பு நகரில் விபத்து –பந்தாடிய கார்


மட்டக்களப்பு நகரில் இரண்டு கார்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் கார் பலத்திசேதமடைந்துள்ளது.

இன்று பிற்பகல் முன்பாக மட்டக்களப்பு நகரின் மண்கூண்டு கோபுர சந்தியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இரண்டு கார்கள் மோதிக்கொண்ட நிலையில் ஒருகார் விபத்துக்குள்ளாகிய நிலையில் தடம்புரண்டதனால் அதில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

குறித்த பகுதிக்கு செ















ன்ற மட்டக்களப்பு பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.