(சசி துறையூர்)
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 30வது தேசிய இளைஞர் விளையாட்டுப்போட்டியில் மகளீர்க்கான கபடி போட்டியின் இறுதிப்போட்டிக்கு மட்டக்களப்பு பெண்கள் கபடி அணி இரண்டாவது தடவையாக தகுதி பெற்றுள்ளது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மஹரகம உள்ளகரங்கில் இன்று (10.06.2018) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குருணாகல் அணியுடனான அரையிறுதிப்போட்டியில் அந்த அணியை 43 கு 16 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றிய கோறளைப்பற்று தெற்கு கிராண் மகளீர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதியை பெற்றுள்ளது.
அந்த வகையில் இறுதிப் போட்டியில் காலி மாவட்ட பெண்கள் அணியை எதிர்த்து மட்டக்களப்பு அணி போட்டியிடவுள்ளது.
இறுதிப்போட்டி ஒக்டோபர் மாதத்தில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.