பெரியகல்லாறில் “கல்வியூராம் கல்லாற்றுப்பதி கடல்நாச்சியே போற்றி” இறுவெட்டு வெளியீடு

மட்டக்களப்பு பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீகடல்நாச்சியம்மன் மற்றும் ஸ்ரீசர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயம் ஆகியவை தொடர்பில் பாடப்பட்ட “கல்வியூராம் கல்லாற்றுப்பதி கடல்நாச்சியே போற்றி” என்னும் இறுவெட்டுஇன்று மாலை வெளியிட்டு வைக்கப்பட்டது.

பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தினால் தென்னிந்திய பாடகர்களைக்கொண்டு இலங்கையின் இசையமைப்பாளர் சுஜிதனின் கைவண்ணத்தில் இந்த இறுவெட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்வெளியீட்டு நிகழ்வு பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீகடல்நாச்சியம்மன் ஆலய முன்றிலில் பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் தலைவர் ஆ.அகிலன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஆன்மீக அதிதிகளாக கடல்hநச்சியம்மன் ஆலய பிரதமகுரு ச.அரசன் பூசகர் மற்றும் பூசகர் வஜகோவிந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மீள்குடியேற்ற, இந்துக்கலாசார, புனர்வாழ்வு, மீள்கட்டுமான,வடமாகாண அபிவிருத்தி,இந்துசமய விவகார அமைச்சின் செயலாளர் பொன்.சுரேஸ் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜா சிறப்பு அதிதியாக கலந்துகொண்டதுடன் ஆலயங்களின் தலைவர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.