மட்டக்களப்பு நகரில் பதுக்கலில் ஈடுபடும் பெற்றோல் நிலையங்கள் -மாவட்ட அரசாங்க அதிபர் நடவடிக்கை

மட்டக்களப்பு நகரில் உள்ள பெற்றோல் நிலையங்களில் பெற்றோல் பதுக்கப்படுவதாக பாவனையாளர்களினால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பெற்றோல் நிலையங்களில் பெற்றோல் இல்லையென்ற அறிவிப்பு பலகையிடப்பட்டு பெற்றோல் பதுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபரை தொடர்புகொண்டு வினவியபோது இது தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபையினரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் அவர்கள் அது தொடர்பான நடவடிக்கையெடுப்பார்கள் எனவும் தெரிவித்தார்.