தமிழ் தேசிய கூட்டமைப்பினுள் இருந்த பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது –தமிழரசுக்கட்சி

தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்கல் தாக்கல் செய்யும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தலைமையில் இந்த வேட்பு மனுக்கல் தாக்கல்செய்யப்பட்டன.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்,ஞா.சிறிநேசன் உட்பட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள்,வேட்பாளர்கள் என பெருமளவானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இ;ங்’கு தொடர்ந்து கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம்,
எங்களுக்கள் இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளது.நாங்கள் ஒரு குடும்பம் நாங்கள் ஒன்றாகவே இருப்போம்.குடும்பத்தில் யாரும் பிரச்சினைகள் பிரிந்துகொண்டுசென்றாலும் நாங்கள் ஒன்றாகவே இருப்போம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சிமன்றங்களுக்கு நாங்கள் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தோம்.ஏற்கனவே நான்கு உள்ளுராட்சிமன்றங்களுக்கான வேட்பு மனுக்களை தாக்கல்செய்துள்ளோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகபோக ஆதரவினைப்பெற்ற ஒரு கட்சி.தமிழ்தேசிய கூட்டமைப்பு ஒன்றாக பயணிக்கவேண்டும் என்று புத்திஜீவிகள், கல்விமான்கள்,ஊடகவியலாளர்களின் கருத்துகளை கவனத்தில்கொண்டு பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்னும் கூட்டைமுன்நகர்த்திவருகின்றோம்.இது ஏனையவர்களுக்கு ஒரு செய்தியாக இருக்கவேண்டும்.

தமிழ் மக்கள் ஒற்றுமைப்படவேண்டும் என்று கூறிவிட்டு வெவ்வோறு திசைகளில் சென்று குரல் எழுப்பிக்கொண்டிருப்பது வெறுமனே வார்த்தைகளாக இருக்குமே தவிர செயற்பாடாக இருக்கமுடியாது.

தற்போது வேட்பு மனுக்களை தாக்கல்செய்துள்ளவர்கள் கூட தமிழ் மக்களின் நாடித்துடிப்பினை அறிந்துகொண்டு,தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்துகளை அறிந்துகொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணையவேண்டும்.மக்கள் அனைவரும் எங்களோடுதான் இருப்பார்கள்.

பலர் பலவிதமான கருத்துகளை தெரிவித்துவருகி;ன்றனர்.அவர்கள் செய்யும் செயலே அவர்கள் யார் என்பதை வெளிப்படுத்தும்.வெறும் வார்த்தைகளினால் கூறுவதைக்கொண்டு மக்கள் அவர்களை மதிப்பிடமாட்டார்கள்.அவர்கள் என்ன செய்தார்கள் என்பதையெல்லாம் மக்கள் அறிந்துவைத்துள்ளனர்.ஓட்டுமொத்த தமிழ் மக்களின் ஆதரவு எங்கள் பக்கம் உள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அனைத்து உள்ளுராட்சி மன்றங்களையும் கைப்பற்றி அதன் மூலம் சிறந்த சேவையினை அபிவிருத்தி திட்டங்களை செய்யும் அதேவேளையில் இலங்கைக்கும் சர்வதேசத்திற்கும் தமிழர்கள் அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பின்னால் நிற்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்தி புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்பாட்டினை முன்நகர்த்திசெய்யும்.