(லியோன்)
இலங்கையின் 69 வது சுதந்திர தினத்தினை சிறப்பிக்கும்
வகையில் பாடசாலை மாணவர்களுக்கான சிறப்பு பேச்சு மற்றும் பாடல் போட்டிகள் கலாசார அதிகார சபை மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் மட்டக்களப்பில் (10) வெள்ளிக்கிழமை நடைபெற்றது .
மட்டக்களப்பு மண்முனை வடக்கு
கலாசார அதிகார சபையும் கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் “சுதந்திர
மனிதனின் சுதந்திர தினம் “ எனும் தலைப்பில் பேச்சு மற்றும் பாடல் போட்டிகள் நிகழ்வுகள்
மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே .குணநாதன்
தலைமையில் பிரதேச செயலக டேபா மண்டபத்தில்
நடைபெற்றது .
நடத்தப்பட்ட பேச்சு மற்றும் பாடல் போட்டிகளின் மண்முனை வடக்கு பிரதேச
செயலக பிரிவுக்குற்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர் ,
குறித்த போட்டி நிகழ்வுக்கு
நடுவர்களாக முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர் எஸ் .
எதிர்மன்னசிங்கம் , அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி . எஸ் . கலைவாணி
,திருமதி .வேணுகா ,திருமதி எஸ் .சரண்யா மற்றும் கலாசார உத்தியோகத்தர்கள்
,மாணவர்கள் ,ஆசிரியர்கள் கலந்துகொண்டனர் .