பட்டதாரிகளுக்கு ஆதரவாக 16 சட்டத்தரணிகள் ஆஜர் –வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் நன்றி தெரிவிப்பு

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் உட்பட நான்கு பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டபோது அந்த வழக்கு விசாரணையின்போது பட்டதாரிகளுக்கு சார்பாக 16 சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.

இதன்போது ஆஜராகிய அனைத்து சட்டத்தரணிகளுக்கும் தமது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் ரி.கிஷாந்த் தெரிவித்தார்.

பல்வேறு கஸ்டங்களின் மத்தியில் மட்டக்களப்பில் தமது நியாயமான உரிமைகளை வலியுறுத்தி வேலையற்ற பட்டதாரிகள் அமைதியான முறையிலும் மற்றவர்களுக்கு இடையூறுகள் அற்ற வகையிலும்போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

இந்த நிலையில் இந்த போராட்டங்களுக்கு பல்வேறு வழிகளிலும் பலர் உதவி வருகின்னர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

குறிப்பாக நேற்று மட்டக்களப்பு நீதிமன்றில் எங்கள் மீது வழக்கு தாக்கல்செய்யப்பட்டிருந்தபோது 16க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் எங்களுக்கு சார்பாக ஆஜராகி எங்களுக்கு ஆதரவளித்தனர்.அனைவருக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

எமது போராட்டம் வெற்றியளிக்கவேண்டுமானால் அனைவரும் தங்களுக்குள்ள வேறுபாடுகளை மறந்து எமதுபோராட்டத்திற்கு ஆதரவளிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.