அருணோதய வித்தியாலய இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வுகள்


(லியோன்)

மட்டக்களப்பு அருணோதய வித்தியாலய  இல்ல விளையாட்டு போட்டி வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது .


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  மட்டக்களப்பு அருணோதய வித்தியாலய  இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வுகள்  பாடசாலை மைதானத்தில் அதிபர்  திருமதி எஸ் .ரவிதேவன்  தலைமையில் நேற்று மாலை  நடைபெற்றது .

விளையாட்டு போட்டி நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா .நெடுஞ்ச்செழியன்  கௌரவ விருந்தினர்களாக உதவிக் கல்விப் பணிப்பாளர் உடற்கல்வி வி .லவக்குமார், மன்முனை வடக்கு  கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ .சுகுமார், ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்களால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்  

தொடர்ந்து  தேசிய கொடி, பாடசாலை கொடி மற்றும் இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் தொடர்ந்து இல்ல மாணவ தலைவர்களால் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு, மாணவ தலைவர்களின் சத்திய பிரமாண நிகழ்வுடன்  மாணவர்களின்  அணிவகுப்புடன் விளையாட்டு போட்டி நிகழ்வு   ஆரம்பமானது,

இவ் விளையாட்டு நிகழ்வுகளில்  மாணவர்களின் வினோத விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது,


இறுதியாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும்,   வழங்கப்பட்டு விளையாட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக நிறைவு பெற்றது.