செங்கலடி விவேகானந்தா வித்தியாலய வீதி செப்பனிடபட்டமைக்கு மாணவர்கள் நன்றி தெரிவிக்கின்றனர்

 (லியோன்)

செங்கலடி விவேகானந்தா   வித்தியாலய மாணவர்களின் கோரிக்கைக்கு அமைய பாடசாலை பிரதான  வீதியினை  திருத்தி தந்த ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை செயலாளர்  அவருடன் இணைந்து செயல்பட்ட பிரதேச சபை உத்தியோகத்தர்கள் , ஊழியர்களுக்கு  மாணவர்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர் .

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபைக்குட்பட்ட ஐயங்கேணி கிராம பகுதியில் இருந்து செங்கலடி விவேகானந்தா  வித்தியாலயத்திற்கு செல்லும் பிரதான பாடசாலை வீதி மழைக்காலங்களில்  வெள்ளநீரினால் மூழ்கி கிடப்பதனால்  மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்கு பெரும் சிரமங்களை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக  ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை செயலாளர் கே .பேரின்பராஜா கவணத்திற்கு கொண்டு செல்லப்பட்டது  .

மாணவர்களின் கோரிக்கைக்கு அமைய குறித்த வீதியினை கடந்த 03ஆம் திகதி  பார்வையிட்ட பிரதேச சபை செயலாளர்  குறித்த வீதியை புனரமைப்பதற்கான நடவடிக்கையினை  மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார் .   .

இதற்கு அமைய குறித்த வீதிக்கு  தற்பொழுது கிரவல் போடப்பட்டு செப்பனிடப்பட்டுள்ளது


இந்த துரித நடவடிக்கையினை மேற்கொண்ட ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை செயலாளருக்கும் , அவருடன் இணைந்து செயல்பட்ட பிரதேச சபை உத்தியோகத்தர்கள் , ஊழியர்களுக்கும் இதேவேளை இந்த வீதி தொடர்பான செய்தியினை இணையத்தளத்தில் பிரசுரித்த மட்டுநியுஸ் இணையத்தளத்திற்கும்  இப்பாடசாலை மாணவர்கள்  , அதிபர் ,ஆசிரியர்கள் . ,பாடசாலை நலன்சார்ந்த பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர் .