கோப்பாபுலவு மக்களுக்காக கிளர்ந்தெழுந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்

கேப்பாபுலவு மக்கள் மேற்கொண்டுவரும் தொடர்ச்சியான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிழக்கில் ஆதரவு கவன ஈர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்களினால் ஏற்பாடுசெய்த மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் இன்று திங்கட்;கிழமை மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக முன்றலில் நடாத்தப்பட்டது.

வாயில் கறுப்பு துணி கட்டியவாறு பறை மேள அறைகூவலுடன் அமைதியான முறையில் மாணவர்களால்  கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கேப்பாபுலவு மக்களின் காணியை அவர்களுக்க வழங்கி அவர்களை நிம்மதியாக வாழவைப்பதற்கான நடவடிக்கையினை நல்லாட்சி அரசாங்கம் எடுக்கவேண்டும்  அத்தோடு அப்பகுதி மாணவர்களின் கல்விக்கு முன்னுரிமை வழங்கி இப்பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமென இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதன்போது பல்வேறு சுலோகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.