வாழைச்சேனை கிண்ணையடி விளையாட்டு மைதானம் திறந்துவைப்பு.

(சசி துறையூர்) கொள்கைத்திட்டமிடல் மற்றும் பொருளாதார நடவடிக்கை  அமைச்சின் சிந்தனை மற்றும் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிதி ஒதுக்கீட்டில் கிண்ணையடி வெண்ணிலா இளைஞர் கழகத்தினால் புனரமைப்பு செய்யப்பட்ட வாழைச்சேனை கிண்ணையடி விளையாட்டு மைதானம்  பயன்பாட்டுக்காக  06.02.2017
திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

பிரதேச இளைஞர் சேவை அலுவலர் திரு த.சபியதாஸ் தலைமையில்   நடைபெற்ற    இவ் வைபவத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் பிரதம அதிதியாகவும், வாழைச்சேனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர், கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலய அதிபர், இளைஞர் பாராளுமன்ற கல்வி அமைச்சர், மட்டக்களப் மாவட்ட சம்மேளனத் தலைவர், கிண்ணையடி கிராம சேவகர், கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் மற்றும் பெண்கள் கிராம அபிவிருத்தி சங்க தலைவி ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் இளைஞர் கழக உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.