மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஊடக செயலமர்வு

மட்டக்களப்பு,பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மகா வித்தியாலயத்தில் உயர்தர மாணவர்களுக்கான ஊடகம் தொடர்பான செயலமர்வு இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியமும் கல்லடி வொய்ஸ் ஒப் மீடியாவும் இணைந்து இந்த செயலமர்வினை முன்னெடுத்தது.

மாணவர்கள் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இந்த ஊடக செயலமர்வு நடைபெற்றது.

இந்த செயலமர்வில் களுதாவளை மகா வித்தியாலயம் உட்பட பல்வேறு பாடசாலைகளில் உயர்தரத்தில் ஊடகம் தொடர்பிலான பாடநெறியை மேற்கொள்ளும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற செயலமர்வில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும் கல்லடி வொய்ஸ் ஒப் மீடியாவின் பணிப்பாளருமான எஸ்.சஞ்சித் மற்றும் ஒன்றியத்தின் இணைப்பாளர் உ.உதயகாந்த் ஆகியோர் கலந்துகொண்டு ஊடகம் தொடர்பான கருத்துரைகளை வழங்கினர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஊடக கல்வியினை மேற்கொள்ளும் மாணவர்களுக்கான ஊடக செயலமர்வுகளை நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.