இருதயபுரம் வாழைச்சேனை பிரதான வீதி பஸ்தரிப்பிடத்திற்கு முன்பாக பாரவூர்தி மதிலுடன் மோதி விபத்து

(லியோன்)

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் இருதயபுரம் சந்தியில் உள்ள பஸ்தரிப்பிடத்திற்கு  முன்பாக   பாரவூர்தியொன்று மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் (14) அதிகாலை  காலை நான்கு மணியளவில்  கொழும்பு ஜாஎல பகுதியில் இருந்து மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியை நோக்கி பயணித்த  நிலத்திற்கான பதிகல் ஏற்றிய பாரஊர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேகக் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின்போது தெய்வாதீனமாக சாரதியும் உதவியாளரும் உயிர் தப்பியுள்ளதுடன் பாரா ஊர்தியும் அதில் ஏற்றி சென்ற நிலத்திற்கான பதி கற்களும் கடுமையாக சேதமாகியுள்ளது.\

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்