மட்டக்களப்பு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலய கல்லூரி தின நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலய கல்லூரி தின நிகழ்வு மிக சிறப்பாக பாடசாலையில் நடைபெற்றது . 


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  பாலமீன்மடு  விக்னேஸ்வரா வித்தியாலயத்தின்  99வது ஆண்டு நிறைவு விழா வித்தியாலய அதிபர்  திருமதி  சி .சீஸ் .மகேந்திரன் தலைமையில்  மிக சிறப்பாக நடைபெற்றது

நடைபெற்ற கல்லூரி தின நிகழ்வில் பாடசாலை சுகாதார கழக மாணவர்களுக்கு அடையாள அட்டை அணிவித்தலுடன் மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்  , மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வும் இடம்பெற்றதுடன் ,  2016 தர ஐந்தாம்  புலமைப்பரிசில் பரீட்சையில்  சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் இவர்களுக்கும் முதலாம் தர மாணவர்களுக்கும்  கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது . 

இந்நிகழ்வின் போது ஐந்தாம்  புலமைப்பரிசில் பரீட்சையில்  சிறந்த பெற்ற மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் 

இந்நிகழ்வில்  அதிதிகளாக மட்டக்களப்பு கல்வி வலய அலுவலக உதவிக்கல்விப் பணிப்பாளர் (உடற்கல்வி) வி .லவக்குமார் ,  மட்டக்களப்பு கல்வி வலய அலுவலக ஆலோசனை வழிகாட்டல் உத்தியோகத்தர் ,எ .ஜெகநாதன் , பாலமீன்மடு இந்து சமய அபிவிருத்தி மன்றத்தலைவர் என் .ஜெகதீசன் , பாலமீன்மடு ஆர் .டி .எஸ் . செயலாளர் ஆர் . கலைவேந்தன் ,பாலமீன்மடு  விக்னேஸ்வரா வித்தியாலய பழைய மாணவன் எஸ் . ஜெகதீஸ்வரன் மற்றும் இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள் , பெற்றோர்கள்  என பலர் கலந்து சிறப்பித்தனர் .