(லியோன்)
மட்டக்களப்பு தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் தலைமையில் இன்று (05) இடம்பெற்றது.
மட்டக்களப்பு தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் தலைமையில் பங்குதந்தை எலக்ஸ் ரொபட் மறை
மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தேவதாசன் ஆகியோர் இணைந்து திருவிழா கூட்டுத்
திருப்பலி ஒப்புக்கொடுத்தனர் .
ஆலய வருடாந்த திருவிழா பங்குதந்தை
ஏலக்ஸ்
ரொபட் தலைமையில் 27.01.2017 வெள்ளிக்கிழமை மாலை 05.30 மணிக்கு
கொடியேற்றத்துடன் ஆரம்பமானதுடன் நவ நாட்காலங்களில்
தினமும் மாலை 05.03 மணிக்கு திருசெபமாலையும், மறைவுரைகளும், பிராத்தனைகளுடன் திருப்பலிகளும்
இடம்பெற்றது
04.02.2017
சனிக்கிழமை
மாலை 05.30 மணிக்கு விசேட நற்கருணை
வழிபாடுகளும் , மறைவுரைகளும்
இடம்பெற்றதுடன் தொடர்ந்து
அன்னையின்
திருச்சுருவ பவணியும் விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது
.
05.02.2017 ஞாயிற்றுக் கிழமை காலை 07.00 மணிக்கு மட்டக்களப்பு
மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப்
ஆண்டகை
தலைமையில் பங்குதந்தை எல்க்ஸ் ரொபட் , மறை மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தேவதாசன் ஆகியோர் இணைந்து
திருவிழா திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது .
திருப்பலியின் பின் அன்னையின்
திருச்சுருவ பவணியும் அதனை தொடர்ந்து ஆலய திருவிழா
திருநாள்
கொடியிறக்கப்பட்டு
ஆலய வருடாந்த திருவிழா
நிறைவுபெற்றது .