முனைப்பு நிறுவனத்தினால் வாழ்வாதார மற்றும் மருத்துவ உதவி வழங்கிவைப்பு

முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் வாழ்வாதார மற்றும் மருத்துவ உதவி வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக் கிழமை காலை மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் தலைமையில் இடம்பெற்றது.

இலங்கையில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் வாழ்வாதார மற்றும் கல்வி அபிவிருத்தித் திட்டங்களை பிரதானமாக மேற்கொண்டுவரும் முனைப்பு நிறுவனமானது மருத்துவ உதவிகளையும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இறக்கும் ஏழைகளின் பிரேதங்களை வீடுகளுயுக்கு ஏற்றிக் கொடுக்கும் வேலைத்திட்டங்களையும் மேற்கொண்டு வருவதுடன் அனாதரவற்றவர்களின் பிரேதங்களையும் அடக்கம் செய்வதற்கான உதவிகளையும் வழங்கி வருவதுடன் இயற்கை அனர்த்த இளப்புக்களுக்கும் உதவிகளை மேற்கொண்டு வருகின்றது.

யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் கணவனை இளந்த பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதுடன் அக் குடும்பங்களின் பிள்ளைகளின் கல்வி அபிவிருத்தியினையும் முனைனெடுக்கும் நோக்கிலேயே இவ் உதவிகள் இன்று வழங்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் மா அரைக்கும் இயந்திரம், தையல் இயந்திரம் என்பன் சுயதொழிலுக்காக வழங்கப்பட்டதுடன் அடுவளர்ப்பிற்கான நிதி உதவி ,சிற்றுண்டி தயாரித்து வழங்குவதற்கான  நிதிஉதவி, புடவைக் கடை அமைப்பதற்கான நிதி உதவி ,மருத்துவத்துக்கான உதவி என்பன வழங்கப்பட்டது.

இதன்பொது முனைப்பு சுவிஸ் அமைப்பின் நிருவாக சபை உறுப்பினர் கிருபா கடந்த 9 அம் திகதி திருமணம் செய்துகொண்டதன் நினைவாக யத்தத்தினால் கணவனை இளந்து பெண் தலைமைதாங்கும் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப உதவ முன்வந்த நிலையில் புடவைக் கடை அமைப்பதற்கான நிதியினை தனது பாரியார் விதுசா சகிதம் வழங்கிவைத்தார்.

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் வி.தவராசா பிரதம அதிதியாகக் சுலந்துகொண்ட இந் நிகழ்வில் முனைப்பு சுவிஸ் அமைப்பின் நிருவாக உறுப்பினர் கிருபா மற்றும் அவருடைய பாரியார் விதுசா ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கௌரவ அதிதிகளாக முனைப்பு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் மு.அருணன் மற்றும் முனைப்பின் செயலாளர் இ.குகநாதன்,பொருளாhளர் அ.தயாநந்தரவி,ஆலோசகர் க.புஸ்பராசா அகியோர் கலந்துகொண்டதுடன் உதவிகளையும் வழங்கிவைத்தனர்.