மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாம் ஜிம்ஆ மஸ்ஜித் பள்ளிவாயலில் சுதந்திர தின நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாம் ஜிம்ஆ மஸ்ஜித் பள்ளிவாயலில் சிறப்பு சுதந்திர தின நிகழ்வுகள் இன்று நடைபெற்றது


இலங்கையின் 69 வது  சுதந்திர  தினத்தினை  முன்னிட்டு  மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாம் ஜிம்ஆ மஸ்ஜித்  பள்ளிவாயலில் இடம்பெற்ற விசேட தொழுகையின் பின் சிறப்பு சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (04) நடைபெற்றது . 

மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாம் ஜிம்ஆ மஸ்ஜித்  பள்ளிவாயல்சலாமா விளையாட்டு கழகம் மற்றும் வெயிட் இஸ்லாமிய வர்த்த நலன்புரி சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த 69 வது சுதந்திர  தின நிகழ்வில் பிரதம விருந்தினராக  மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்துகொண்டார்.

மட்டக்களப்பு வெயிட் இஸ்லாமிய வர்த்த நலன்புரி சங்க தலைவர் கே .எல் .எம் .கலீல் தலைமயில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்  தேசிய கொடியினை ஏற்றி  நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்

இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு , அம்பாறை  பிரதி பொலிஸ்மா  அதிபர்  டப்ளியு . ஜெ . ஜாகொட  ஆராச்சி , மட்டக்களப்பு  பொலிஸ்  நிலைய   பொறுப்பதிகாரி   எம் .எம் .ஜி .டி. தீ காஹா வதுற ,மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சர்  K.M.U.H  அக்பர் , ஜாமி உஸ் ஸலாம் ஜிம் ஆ பள்ளிவாயலில் தலைவர் எம் .எச் .எம் .சியாம் மற்றும் மட்டக்களப்பு வர்த்தக சங்க உறுப்பினர்கள் , சலாமா விளையாட்டு கழக அங்கத்தர்கள் ,பாதசஅலை மாணவர்கள் ,பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து இலங்கையின் 69 வது சுதந்திர  தின நிகழ்வினை சிறப்பித்தனர்