கோறளைப் பற்று வாழைச்சேனையில் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு.

(சசி துறையூர்)
கோறளைப் பற்று வாழைச்சேனையில் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு.

 கோறளைப்பாற்று பிரதேச உதவி பிரதேச செயலாளர், பிரதேச இளைஞர் சேவை அலுவலர் ஆகியோரின் பங்குபற்றலுடன்
கோறளைப் பற்று வாழைச்சேனை பிரதேச இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்று பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் 2017.02.03 திங்கட்கிழமை நடைபெற்றது.

எஸ்கோ நிறுவனத்தின் (ESCO) அனுசரணையில் நடைபெற்ற இந் நிகழ்வில்
 40 மேற்பட்ட இளைஞர் யுவதிகள் பங்குபற்றியிருந்தனர்.

 நைற்றா நிறுவனத்தின் சமூக வள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் விரிவுரை வளதாரிகளாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இங்கு இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் ஆலோசனை என்பவற்றுடன் தொழிற்பயிற்சி நெறி ஒன்றினை தொடர்வதற்கான அறிவூட்டலும் வழங்கப்பட்டுள்ளன.