(லியோன்)
ஜனதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக போதைப்பொருள் ஒழிப்பு தேசிய
வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில்
தற்போது போதைப்பொருள் ஒழிப்பு
செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது .
போதைப்பொருள் பாவனை அதிகூடிய மாவட்டமான மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டங்கள் 2017 பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
.
இதன்கீழ் இன்று மட்டக்களப்பு நகர் பகுதிகளில் பொதுமக்கள் நடமாடும்
பிரதான இடங்களான ,பஸ் தரிப்பு நிலையங்கள் , பொது மலசல கூடங்கள், பொதுசந்தை போன்ற
பிரதான இடங்களில் புகைப்பிடிப்பவர்களுக்கான
சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன .
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மட்டக்களப்பு மாநகர பொது சுகாதார
பரிசோதகர்களும் , மட்டக்களப்பு மாவட்ட மதுவரி
தினைக்களமும் இணைந்து இந்த நடவடிக்கையினை இன்று மேற்கொண்டனர் .
இன்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது
குற்றவாளிகளாக இனம் காணப்பட்ட நபர்களுக்கு எதிராக நீதிமன்ற சட்ட நடவடிக்கை
எடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு
எச்சரிக்கை துண்டு பிரசுரங்களும்
காட்சிப்படுத்தப்பட்டன