(லியோன்)
மட்டக்களப்பு
கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையின் 2017 ஆம் ஆண்டுக்கான இல்ல
விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி சிவானந்தா தேசிய
பாடசாலையின் 2017 ஆம் ஆண்டுக்கான திறனாய்வு
இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் நேற்று மாலை பாடசாலை
மைதானத்தில் அதிபர் எஸ் .தயாபரன் தலைமையில் நடைபெற்றது
விளையாட்டு
நிகழ்வினை ஆரம்பிக்கும் முகமாக இல்ல மாணவ தலைவர்களால் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு, இல்ல மாணவர்களின்
அணிவகுப்பு நிகழ்வுடன் விளையாட்டு
நிகழ்வுகள் ஆரம்பமானது
விளையாட்டு
நிகழ்வுகளில் மாணவர்களின் ஓட்டப்போட்டி, உதைப்பந்தாட்டம் ,
கிரிகெட் , கராட்டி , உடற்பயிற்சி பயிற்சி
போன்ற விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றது .
விளையாட்டு
போட்டியின் இறுதி நிகழ்வாக வெற்றி
பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டு விளையாட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக
நிறைவு பெற்றது..
இந்த விளையாட்டு
போட்டி நிகழ்வில் விருந்தினர்களாக கிழக்குமாகாண
சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் , உதவிக் கல்விப் பணிப்பாளர் உடற்கல்வி வி .லவக்குமார், மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ . சுகுமாரன்
மற்றும் இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ,பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர் .