முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனம் கொக்கட்டிச்சோலையில் தீயினால் வீடு எரிந்த குடும்பத்திற்கு உதவி

 (சசி துறையூர்) முனைப்பு ஸ்ரீ லங்கா
நிறுவனம்
கொக்கட்டிச்சோலையில் தீயினால் வீடு எரிந்த
குடும்பத்திற்கு நிதி உதவி.

கொக்கட்டிச்சோலை 9 ஆம் வட்டாரத்தில் வீடு
தீக்கிரையாகியதால் பாதிக்கப்பட்ட
குடும்பத்திற்கு முனைப்பு ஸ்ரீ லங்கா
நிறுவனத்தினால்  உதவி வழங்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில்
கொக்கட்டிச்சோலை 9ஆம் வட்டாரத்தில் வசிக்கும்
சீ.விஜேந்திரகுமார் என்பவரின் வீடு முற்றாக
எரிந்ததினால் வீட்டிற்குள் இருந்த உடுதுணிகள்
உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் முற்றாக
எரிந்துள்ளது.
இக் குடும்பத்திற்கு உதவுமாறு கிராம சேவகர்
ஜீவிதன் ஊடாக விடுக்கப்பட்ட வேண்டுகோளை
அடுத்து குறித்த வீட்டுக்கு இன்று
சனிக்கிழமை மாலை சென்ற முனைப்பு ஸ்ரீ
லங்கா நிறுவனத்தின் தலைவர் மாணிக்கப்போடி
சசிகுமார் தலைமையிலான முனைப்பு
சுவிஸ் அமைப்பின் உறுப்பினர் கேதீஸ் மற்றும்
முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின்
செயலாளர் இ.குகநாதன்,பொருளாளர்
அ.தயானந்தரவி உள்ளிட்ட குழுவினர்
சேதமடைந்த வீட்டினைப் பார்வையிட்டதுடன்
உடுதுணிகளைப் கொள்வனவு செய்வதற்காக
ரூபா பத்தாயிரம் நிதி வழங்கியதுடன்
பாடசாலை செல்லும் பிள்ளைக்கு சப்பாத்து போன்ற பொருட்களும்
வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது கிராம சேவை உத்தியோகஸ்தர்
ஜீவிதன் உட்பட பலர் கலந்தகொண்டமையும்
குறிப்பிடத்தக்கது.