மட்டக்களப்பில் எழுக தமிழ் நிகழ்வு –அலையென திரண்ட மக்கள்

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட இரண்டாவது முறையாக கிழக்கில் நடாத்தப்பட்ட மாபெரும் மக்கள் எழுச்சி நிகழ்வான கிழக்கு எழுக தமிழ் நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற இந்த எழுக தமிழ் நிகழ்வில் மூவாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.

சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை தினிக்க வேண்டாம்“ “விடுதலை செய் விடுதலை செய் அரசியல் கைதிகளை விடுதலை செய்...“ “ நிறுத்து நிறுத்து பயங்கர வாத தடை சட்டத்தை திறுத்து“ போன்ற கோசங்களை எழுப்பியவாறு பேரணியில் கலந்துக்கொண்டுள்ளனர்.\\

மட்டக்களப்பு கல்லடி மணிக்கூடு கோபுரத்திற்கு அருகில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களுடன் வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சி.விக்னேஸ்வரன் தலைமையில் இந்த எழுச்சி பேரணியில் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இந்த எழுச்சிப்பேரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சித்தாந்தன்,எஸ்.வியாழேந்திரன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம்,வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கல்லடியில் இருந்து ஆரம்பமான பேரணியில் காணாமல்போனவர்களின் உறவினர்கள்,விசேட தேவையுடைய அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு அமைப்பின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

நாவற்குடா விவேகாந்தா விளையாட்டு மைதானத்தை பேரணி வந்தடைந்ததும் அங்கு எழுக தமிழ் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

இதன்போது தமிழ் வாழ்த்துப்பா இசைக்கப்பட்டு முன்னாள் போராளியினால் ஈகச்சுடர் ஏற்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து எழுக தமிழ் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.