(லியோன்)
நபர் ஒருவரை கம்பியால் அடித்து ,கத்தியால் வெட்டி காயம்
ஏற்படுத்திய நபருக்கு எதிராக 05 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத்தண்டனையும் , 60 ஆயிரம் ரூபா நஷ்டஈடு செலுத்துமாறு மட்டக்களப்பு நீதவான்
நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார் .
கல்லடி காளிக்கோவில் வீதியை சேர்த்த நபர் ஒருவரை கம்பியால் அடித்து ,கத்தியால் வெட்டி
காயம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட குகதாசன் சுதாகரன் என்பவருக்கு
எதிராக 2010.10.08 திகதி அன்று
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .
குறித்த வழக்கு தொடர்பாக 2010 ஆம் ஆண்டில் இருந்து வழக்கு நடைபெற்ற வந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைகள் 31.01.2017 ஆம் திகதி செவ்வாய்கிழமை மட்டக்களப்பு நீதவான்
நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளது .
இதன் போது குற்றவாளிக்கு எதிராக
சாட்சியங்கள் நிருபிக்கப்பட்டதன் காரணமாக குற்றவாளிக்கு எதிராக 05 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு
வருட சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட நபருக்கு 60 ஆயிரம் ரூபா நஷ்டஈடு செலுத்துமாறும் மட்டக்களப்பு
நீதவான நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா தண்டனை
விதித்து தீர்ப்பளித்துள்ளார்.