69 வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு


(லியோன்)

மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளினால்  69 வது சுதந்திர  தினத்தை சிறப்பிக்கும் வகையில் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு இன்று (04) முன்னெடுக்கப்பட்டது .


இலங்கையின் 69 வது சுதந்திர தினத்தினை  சிறப்பிக்கும் வகையில்  மட்டக்களப்பு  சிறைச்சாலை அத்தியட்சர்  K.M.U.H  அக்பர்  தலைமையில்  திருப்பெருந்துறை திறந்த வெளி சிறைச்சாலை வளாகத்தில்   நூற்றுக்கு மேற்பட்ட தென்னங்கன்றுகள் நாட்டப்பட்டதுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது

இந்த  நிகழ்வில்  மட்டக்களப்பு சிறைச்சாலை பிரதான ஜெயிலர் என் பிரபாகரன் மட்டக்களப்பு சிறைச்சாலை பிரதம புனர்வாழ்வு உத்தியோகத்தர் விக்கிரம சிங்க ,  சிறைச்சாலை நலன்புரி உத்தியோகத்தர்களான ,பி .சுசிதரன் .எல் .ஜெயசுதாகரன் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள்  கலந்துகொண்டனர் .