(லியோன்)
மாமாங்கம்
ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தின்
2017 ஆம் ஆண்டுக்கான திறனாய்வு இல்ல விளையாட்டுப் போட்டி
நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது
மட்டக்களப்பு
கல்வி
வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மாமாங்கம்
ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான திறனாய்வு இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் இன்று
பாடசாலை மைதானத்தில் அதிபர் வி .முருகதாஸ் தலைமையில் நடைபெற்றது
.
ஆரம்ப
நிகழ்வாக பாடசாலை மாணவர்களால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து அழைத்து
வரப்பட்டனர்,
அதனை
தொடர்ந்து தேசிய கொடி, பாடசாலை கொடி மற்றும்
இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் மாணவர்களின் இல்ல அணிவகுப்பு இடம்பெற்றது.
விளையாட்டு
நிகழ்வினை ஆரம்பிக்கும் முகமாக இல்ல மாணவ தலைவர்களால் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு, மாணவ தலைவர்களின் சத்திய
பிரமாண நிகழ்வு இடம்பெற்றது .
விளையாட்டு
நிகழ்வுகளில் மாணவர்களின் ஓட்டப்போட்டி, மாணவர்களின் உடற்பயிற்சி
பயிற்சி, வினோத உடை போட்டி, மற்றும் பழைய மாணவர்கள் , பெற்றோர்கள்,ஆசிரியர்கள்
ஆகியோரின் வினோத விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது,
பாடசாலையின் 2017ஆம்
ஆண்டு இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும், கேடயங்களும் வழங்கப்பட்டு
விளையாட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக நிறைவு பெற்றது..
இந்த
விளையாட்டு போட்டி நிகழ்வில் விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர் ஞா .ஸ்ரீநேசன் ,கிழக்குமாகாண சபை பிரதி தவிசாளர் என்
.பிரசன்னா இந்திரகுமார் , உதவிக் கல்விப் பணிப்பாளர் உடற்கல்வி வி .லவக்குமார், மண்முனை வடக்கு
கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ . சுகுமாரன், உதவிக் கல்விப்
பணிப்பாளர் (தமிழ் ) யுவராஜா , கல்வி திணைக்கள தொழில் வழிகாட்டி உத்தியோகத்தர் எ
.ஜெகநாதன் , முன்னாள் மதுவரித்
திணைக்களப் பரிசோதகர் எஸ்
.சோமசுந்தரம், குமரன் ஸ்டோஸ் உரிமையாளர் குமரன் மற்றும் இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி குழு
உறுப்பினர்கள் ,பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள்
,பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்