இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு இரண்டு சிறைக்கைதிகள் விடுதலை

 (லியோன்)

2015 ஆம்  ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி இந்த நாட்டின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டு இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.


மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதியின் இரண்டு வருட பதவியேற்பு தினத்தை  சிறப்பிக்கும் முகமாக  சிறப்பு  நிகழ்வுகள் 08.01.2016 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது .

இதற்கு அமைய மட்டக்களப்பு சிறைச்சாலை  அத்தியட்சகர் கே .எம் . யு , எச் . அக்பர்   பணிப்புரைக்கு அமைவாக சிறைச்சாலையின்  பிரதான  சிறைச்சாலை அதிகாரி  என் .பிரபாகரன் தலைமையில் சிறு குற்றங்களுக்கு சிறைத்தண்டனை  விதிக்கப்பட்ட  இரண்டு  சிறைக்கைதிகள் 08.01.2016  ஞாயிற்றுக்கிழமை  விடுதலை செய்யப்பட்டனர்.


இதனை தொடர்ந்து சிரமதான பணிகள் இடம்பெற்றது .இந்த  சிரமதான பணிகளில்   மட்டக்களப்பு சிறைச்சாலை   புனர்வாழ்வு உத்தியோகத்தர்கள் ,சிறைச்சாலை நலன்புரி உத்தியோகத்தர்கள்,   சிறைச்சாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள்    கலந்துகொண்டனர் .